விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன்
- Reporter 12
- 20 Mar, 2024
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயபிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார். திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில் அங்கு ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் விஐபி-க்ககள் மோதும் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *